கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 222 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க., 104 இடங்களை வென்றது. அங்கு ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் 116 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் ம.ஜ.த., தலைவர் குமாரசாமி மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத போதும் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் 222 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க., 104 இடங்களை வென்றது. அங்கு ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் 116 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் ம.ஜ.த., தலைவர் குமாரசாமி மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத போதும் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.