நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1.40 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 7,802 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 2,893 மாணவர்களும், 4,180 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 84.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் மொத்தம் 3,062 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 2,578 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.19 ஆக உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1.40 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 7,802 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 2,893 மாணவர்களும், 4,180 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 84.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் மொத்தம் 3,062 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 2,578 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.19 ஆக உள்ளது.