நீலகிரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.66 சதவிகிதம் பேர் தேர்ச்சி

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1.40 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 7,802 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 2,893 மாணவர்களும், 4,180 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 84.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் மொத்தம் 3,062 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 2,578 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.19 ஆக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...