கோவை: சிறைக் காவலர்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறை கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றியபடி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: சிறைக் காவலர்களால் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கோவை மத்திய சிறை கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றியபடி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் ராஜா (26). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதுள்ள அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிக்காக ஆஜர்படுத்தபட்ட சஞ்சய்ராஜா, ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறை காவலர்கள் தன்னை சிறையில் துன்புறுத்துவதாக புகார் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதி சஞ்சய்ராஜா-வை வெளியில் அழைத்து வந்த போது அவர் சட்டையை கழற்றிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது, "கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துகிறார். மேலும், சிறையில் என்னைத் தாக்கியதால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனக்கு மருத்துவ வசதி செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்." என்றார்.
ரகளையில் ஈடுபட்ட கைதி சஞ்சய்ராஜா-வை காவல்துறையினர் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவருக்குப் பின்னால் வேறு வழக்குகளுக்கு வந்த சிறை கைதிகளும் சிறையில் துன்புறுத்தல் நடப்பது உண்மை தான் என்று சத்தம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறி முழக்கம் எழுப்பிச் சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் ராஜா (26). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதுள்ள அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிக்காக ஆஜர்படுத்தபட்ட சஞ்சய்ராஜா, ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறை காவலர்கள் தன்னை சிறையில் துன்புறுத்துவதாக புகார் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து கைதி சஞ்சய்ராஜா-வை வெளியில் அழைத்து வந்த போது அவர் சட்டையை கழற்றிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது, "கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துகிறார். மேலும், சிறையில் என்னைத் தாக்கியதால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனக்கு மருத்துவ வசதி செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்." என்றார்.
ரகளையில் ஈடுபட்ட கைதி சஞ்சய்ராஜா-வை காவல்துறையினர் இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவருக்குப் பின்னால் வேறு வழக்குகளுக்கு வந்த சிறை கைதிகளும் சிறையில் துன்புறுத்தல் நடப்பது உண்மை தான் என்று சத்தம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறி முழக்கம் எழுப்பிச் சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.