தோல்விகளே வெற்றிக்கு முதல்படி: பிளஸ்-2 தேர்வு தோல்விகளை கண்டு மாணவர்கள் பயக்கக்கூடாது

பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையாமல் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையாமல் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனமுடைந்ததால் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, கோவையில் பிரியா, ஏஞ்சலின் ஜெனிபர் என்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையக் கூடாது என மூத்த மனநல மருத்துவர் என்.எஸ்., மோனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மாணவர்கள் பெரும்பாலும் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டுமே நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவர்கள் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் மீது கோபத்தை காட்டாமல், அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், மாணவர்கள் இருக்கும் பகுதிகள் காற்றோட்டம் இருக்குமாறு ஏற்படுத்த வேண்டும். மேலும், விளையாட்டு போன்றவற்றால் அவர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

மேலும், மக்கள் அவர்களது தவறுகளை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது, நல்ல நிலையில் இருக்கும் பெரும்பாலானோர், தோல்விகளை சுவைத்தவர்களே. எனவே, இதனைப் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். இளைஞர்கள் ஒரு களிமண்ணை போன்றவர்கள். அவர்களை நாம் வழிநடத்தி எதை உருவாக்க நினைக்கிறமோ..?, அதன் வடிவில் அவர்கள் உருவாவார்கள், என அவர் கூறினார்.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு பெற்றோர்கள், சமூதாயம், மீடியாக்கள் மற்றும் அரசு ஆகியவை உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருக்கிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...