கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடங்க உள்ள நிலையில், வரும் 26-ம் தேதி முதல் கனரக வாகனங்கள் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் கூறுகையில், "உக்கடம்-ஆத்துப்பாலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கனரக வாகனங்கள் பொள்ளாச்சி மற்றும் கேரளா சாலைகளுக்கு செல்ல நஞ்சுண்டாபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்ல மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை." என்றார்.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் கூறுகையில், "உக்கடம்-ஆத்துப்பாலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கனரக வாகனங்கள் பொள்ளாச்சி மற்றும் கேரளா சாலைகளுக்கு செல்ல நஞ்சுண்டாபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றன. கனரக வாகனங்கள் செல்ல மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை." என்றார்.