'கனா' பட இயக்குநரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய்

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து '3' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக தற்போது வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், தயாரிக்க இருக்கும் முதல் படத்துக்கு ’கனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கபாலியின் ‘நெருப்புடா’ பாடலை எழுதிப் பாடிய அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜா, சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரராக நினைக்கும் தனது மகளின் கனவை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் தந்தை என்ற கதைக்கருவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சத்யராஜ் தந்தையாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் மகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதைக்கண்ட நடிகர் விஜய் படத்தின் இயக்குநரை பாராட்டியுள்ளார். விஜயின் வாழ்த்து தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் அருண்ராஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...