உதகையில் பலத்த மழை: படகு இல்லத்தில் சவாரி ரத்து

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்த காரணத்தால் படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.


நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்த காரணத்தால் படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அடித்து வந்தது. ஆனால், பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.



மேலும், பாதாள சாக்கடையில் இருந்து சாலைகளில் கழிவு நீர் வெளியேறியதால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். படகு இல்ல சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தற்போது பெய்து வரும் மழையால், மலை தோட்ட காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈட்டுப்பட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



ரத்து

இந்த நிலையில், கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டிகள் நடைபெறவிருந்தது. கனமழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டதோடு, படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...