கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த 8 பேர் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அதில் ஏழு பேர் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்களில் எஸ். தரணிதரன், இ. ஜெகதீஷ், வி.லாவண்யா, பி.ராஜேஸ்வரி, வி.தினேஸ், எல்.சொப்னில் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குழந்தை தொழிலாளியாக இருந்த மீட்கப்பட்ட தரணிதரன் 1,093 மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவம் படிக்க போவதாகவும் அதற்காக நீட் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "குடும்ப சூழ்நிலை காரணமாக 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிக்கு சென்றேன் அதன் பின் குழந்தை தொழில் ஒழிப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்டு சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றேன். மருத்துவம் படித்து இருதய நோய் நிபுணராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. நீட் தேர்வு எழுதியுள்ளேன். என்னைப் போன்ற குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு கல்வி பயில வேண்டும்." என்றார்.
Video: A.Vignesh