கர்நாடகாவில் நீடிக்கும் அரியணை குழப்பம்: கொச்சினில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களுக்கு விடுதி முன்பதிவு

கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.,டிவ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20-க்கும் மேற்பட்டோரும், ம.ஜ.த.வைச் சேர்ந்த ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகிய 2 எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களை விடுதியில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒருபகுதியாக, ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்கள்., கொச்சியில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆந்திராவிற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், ஜேபி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை பா.ஜ.க., முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். கர்நாடகாவில் நிலவி வரும் தற்போதைய சூழல், தமிழகத்தில் அரங்கேறிய கூவத்தூர் அரசியல் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...