கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.,டிவ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20-க்கும் மேற்பட்டோரும், ம.ஜ.த.வைச் சேர்ந்த ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகிய 2 எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களை விடுதியில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒருபகுதியாக, ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்கள்., கொச்சியில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆந்திராவிற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், ஜேபி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை பா.ஜ.க., முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். கர்நாடகாவில் நிலவி வரும் தற்போதைய சூழல், தமிழகத்தில் அரங்கேறிய கூவத்தூர் அரசியல் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.,டிவ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20-க்கும் மேற்பட்டோரும், ம.ஜ.த.வைச் சேர்ந்த ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகிய 2 எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களை விடுதியில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒருபகுதியாக, ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்கள்., கொச்சியில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆந்திராவிற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், ஜேபி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை பா.ஜ.க., முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். கர்நாடகாவில் நிலவி வரும் தற்போதைய சூழல், தமிழகத்தில் அரங்கேறிய கூவத்தூர் அரசியல் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.