திருப்பூர் : இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் வந்துள்ளது.
திருப்பூர் : இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் வந்துள்ளது? என்பதன் விவரங்கள் பின்வருமாறு :-
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24,580 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 11,114 பேர் மாணவர்கள், 13,466 பேர் மாணவிகள். தேர்வு எழுதியவர்களில் 23,640 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 10,530 பேர் மாணவர்கள், 13,110 பேர் மாணவிகள்.

தேர்ச்சி விகிதம்
திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக 96.18 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.13 சதவீதம் அதிகம். தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 94.75 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படியில் திருப்பூர் மாவட்டம் தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.