கோவை : தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவை : தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல், மே 13-ம் தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இல்லாமல் இருந்தது. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு எரிபொருட்கள் விலையில் மாற்றம் செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டது. அதேபோல, கர்நாடகத்தில் தேர்தல் முடிந்த கையோடு விலை உயர்த்தப்பட்டது.
மூன்று நாட்கள்
அதாவது, 13-ம் தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆகவும் இருந்தது. ஆனால், 13-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
14-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்ந்து ரூ.77.93 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்ந்து ரூ.70.25 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த மூன்று நாட்களில் பெட்ரோல் விலை 50 காசுகளும் டீசல் விலை 69 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வடைந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல், மே 13-ம் தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இல்லாமல் இருந்தது. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு எரிபொருட்கள் விலையில் மாற்றம் செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டது. அதேபோல, கர்நாடகத்தில் தேர்தல் முடிந்த கையோடு விலை உயர்த்தப்பட்டது.
மூன்று நாட்கள்
அதாவது, 13-ம் தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆகவும் இருந்தது. ஆனால், 13-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
14-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்ந்து ரூ.77.93 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்ந்து ரூ.70.25 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த மூன்று நாட்களில் பெட்ரோல் விலை 50 காசுகளும் டீசல் விலை 69 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வடைந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.