கோவை விமான நிலையத்தில் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

கோவை : கோவை விமான நிலையத்தில் இரு வேறு விமானங்களில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி பதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யபட்டது.



கோவை : இரு வேறு விமானங்களில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் வைத்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கக் கட்டிகளை கடத்தி வரும் சம்பவம் கோவையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உனைஸ் என்ற இளைஞர் ஒருவரிடம் சுமார் மூன்று கிலோ எடை கொண்ட 52 தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்த அதிகாரிகள். கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 96 லட்சத்து 52 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதே போல். கடந்த 10-ம் தேதி இலங்கையிலிருந்து கோவை வந்த விமானத்தில் வந்த ஏழு பயணிகளிடமிருந்து இரண்டு கிலோ தங்கக் கட்டிகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு ரூ. 65 லட்சத்து 89 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் அவர்களையும் கைது செய்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

ஒரே வாரத்தில் கோவை விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...