கோவை: கோவையில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இசைக்கேற்ப நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
கோவை: கோவையில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இசைக்கேற்ப நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

சி.எஸ்.ஐ கோவை மண்டல தொடர்பியல் துறை சார்பில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்புகள் அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ எஸ்.டி.சி அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் பயிற்சி பட்டறையில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது குறித்து தொடர்பியல் துறை இயக்குனர் அருட்தந்தை கிருஸ்டோபர் கூறுகையில், "பறை இசை குறித்து தவறான கண்ணோட்டம் நிலவி வருகிறது. இது கிராமிய கலைகளில் ஒன்றானது. இந்த கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் இந்தக் கலையை மீட்டெடுக்கும் முயற்சிதான் இது. தொடர்பியல் துறை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தலித் கலை விழா, கீர்த்தனை பெரு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் எழுத்தாளர் திருச்சி பிரபாகரன் மற்றும் விடியல் அமைப்பு சமூக ஆர்வலர் பிரபாகர் கூறியதாவது :- இந்த இசை பயிற்சியில் மாணவர்களுக்கு மனரீதியாகத் தயாராகுதல், இசைக்கேற்ப உடல்மொழி கற்றுத் தரப்படுகிறது. மறைந்து வரும் கலையை திரும்பக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, என்றார்.

இந்தப் பட்டறையில் பங்கேற்றுள்ள கல்லூரி மாணவியான செபெல்லா எஸ்தர் கூறும்போது :- வடகத்திய கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலையை கற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வு, மனப்பான்மையை போக்கவும், இதை மக்களிடையே எடுத்து செல்ல இந்தப் பறை பயிற்சி அமைந்துள்ளது, எனக் கூறினார்.

சி.எஸ்.ஐ கோவை மண்டல தொடர்பியல் துறை சார்பில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்புகள் அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ எஸ்.டி.சி அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் பயிற்சி பட்டறையில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது குறித்து தொடர்பியல் துறை இயக்குனர் அருட்தந்தை கிருஸ்டோபர் கூறுகையில், "பறை இசை குறித்து தவறான கண்ணோட்டம் நிலவி வருகிறது. இது கிராமிய கலைகளில் ஒன்றானது. இந்த கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் இந்தக் கலையை மீட்டெடுக்கும் முயற்சிதான் இது. தொடர்பியல் துறை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தலித் கலை விழா, கீர்த்தனை பெரு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் எழுத்தாளர் திருச்சி பிரபாகரன் மற்றும் விடியல் அமைப்பு சமூக ஆர்வலர் பிரபாகர் கூறியதாவது :- இந்த இசை பயிற்சியில் மாணவர்களுக்கு மனரீதியாகத் தயாராகுதல், இசைக்கேற்ப உடல்மொழி கற்றுத் தரப்படுகிறது. மறைந்து வரும் கலையை திரும்பக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, என்றார்.

இந்தப் பட்டறையில் பங்கேற்றுள்ள கல்லூரி மாணவியான செபெல்லா எஸ்தர் கூறும்போது :- வடகத்திய கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலையை கற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வு, மனப்பான்மையை போக்கவும், இதை மக்களிடையே எடுத்து செல்ல இந்தப் பறை பயிற்சி அமைந்துள்ளது, எனக் கூறினார்.