கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன் பாளையம் சரகம், கோபனாரி பிரிவு, கோபனாரி மேற்கு சுற்றுக்குட்பட்ட கூடப்பட்டி வனப்பகுதியில் கூடுதுறை என்னும் இடமருகில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது. இதனை அவ்வழியாக ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்ததால், யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால், நோய்வாய்பட்டு, உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் சுமார் 10 முதல் 15 வயதுள்ள பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானைகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன் பாளையம் சரகம், கோபனாரி பிரிவு, கோபனாரி மேற்கு சுற்றுக்குட்பட்ட கூடப்பட்டி வனப்பகுதியில் கூடுதுறை என்னும் இடமருகில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது. இதனை அவ்வழியாக ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்ததால், யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால், நோய்வாய்பட்டு, உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் சுமார் 10 முதல் 15 வயதுள்ள பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானைகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.