நீலகிரி: மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோத்தகிரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்க பதக்கம் வென்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நீலகிரி: மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோத்தகிரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்க பதக்கம் வென்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சர்வ தேச அளவிலான கராத்தே போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், பாகிஸ்தான், கொரியா, இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் கோத்தகிரி தனியார் பள்ளி ,மாணவர்கள் அபிராம், அக்னீஸ், விகாசினி, திவேஷ் ஆகியோர் தங்க பதக்கங்களையும், அஸ்வின் கார்த்திகேயன், ஜெய்வீர், பூவரசன், பிரனேஷ், ஜான்சன் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தங்கப் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா-வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சர்வ தேச அளவிலான கராத்தே போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், பாகிஸ்தான், கொரியா, இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் கோத்தகிரி தனியார் பள்ளி ,மாணவர்கள் அபிராம், அக்னீஸ், விகாசினி, திவேஷ் ஆகியோர் தங்க பதக்கங்களையும், அஸ்வின் கார்த்திகேயன், ஜெய்வீர், பூவரசன், பிரனேஷ், ஜான்சன் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தங்கப் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா-வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.