அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த நிலை மேற்கு நகர்கிறது. இது மெல்ல மெல்ல வளைகுடா நாடுகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை நோக்கி செல்கிறது. இந்த காற்றழுத்த நிலை அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று குறிப்பிடத்தக்க அளவிலான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அன்னூர் பகுதியில் 15 மி.மீ. மழையும், மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் 1 மி.மி. அளவு மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் சராசரியாக 1.55 மி.மி. மழை பதிவாகியுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த நிலை மேற்கு நகர்கிறது. இது மெல்ல மெல்ல வளைகுடா நாடுகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை நோக்கி செல்கிறது. இந்த காற்றழுத்த நிலை அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று குறிப்பிடத்தக்க அளவிலான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அன்னூர் பகுதியில் 15 மி.மீ. மழையும், மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் 1 மி.மி. அளவு மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் சராசரியாக 1.55 மி.மி. மழை பதிவாகியுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.