சென்னை: உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்.
சென்னை: உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்.
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946-ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.
கடும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதுவரை பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ள பாலகுமாரன், நாயகன், குணா, பாட்ஷா, ஜீன்ஸ் மற்றும் ஜென்டில் மேன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.