திருப்பூர் : இயற்கை வளங்களைப் பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : இயற்கை வளங்களைப் பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையைத் தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும், மணல் கொள்ளையினை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற போராட்டத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையைத் தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும், மணல் கொள்ளையினை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற போராட்டத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.