கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
கோவை : வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் திறன் பயிற்சி மூலம் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கல்வி திறனுக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவரவர் பயிற்சி பெற்ற துறைக்கேற்ப வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் விளம்பர ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இந்த விளம்பர ஊர்தி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திறன் பயிற்சி குறித்த காணொளி மூலம் விளக்கப்படும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது :- தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம், மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திறன் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் 0422-2642388 அல்லது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0422-2642041 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் திறன் பயிற்சி மூலம் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கல்வி திறனுக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவரவர் பயிற்சி பெற்ற துறைக்கேற்ப வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் பயிற்சி ஊக்குவித்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் விளம்பர ஊர்தியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இந்த விளம்பர ஊர்தி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திறன் பயிற்சி குறித்த காணொளி மூலம் விளக்கப்படும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது :- தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம், மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. திறன் பயிற்சி மேற்கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் 0422-2642388 அல்லது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0422-2642041 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.