திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பல்லடம், மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்பவர்கள், கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கூலி உயர்வு தங்களுக்கு முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், தங்களால் வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலவி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளும் அதிக அழுத்தம் கொடுப்பதால் தற்கொலை செய்வதை தவிர்த்து, தங்களுக்கு வேறு வழி இல்லை என விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.

பல்லடம், மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்பவர்கள், கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கூலி உயர்வு தங்களுக்கு முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், தங்களால் வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலவி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளும் அதிக அழுத்தம் கொடுப்பதால் தற்கொலை செய்வதை தவிர்த்து, தங்களுக்கு வேறு வழி இல்லை என விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.