திருப்பூர் : திருப்பூரில் வீசிய சூறைக்காற்றிற்கு சரிந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் வீசிய சூறைக்காற்றிற்கு சரிந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சரிந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மங்கலம் சாலை குள்ளேகவண்டன்புதூர், குளத்துப்புதூர், சிண்ணான்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சரிந்தன.
இதனால், சனிக்கிழமை மாலையில் இருந்தே இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்கம்பங்கள் சாய்ந்து 2 நாட்களாகியும், அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழையால் விழுந்த மரங்களை அகற்றவோ, மின்கம்பங்களை சீரமைக்கவோ எந்த அதிகாரியும் தங்கள் பகுதிக்கு வரவில்லை. மரங்களை தாங்களே வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் விரைந்து முடித்து தரப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தினால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக திருப்பூர் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூரில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சரிந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மங்கலம் சாலை குள்ளேகவண்டன்புதூர், குளத்துப்புதூர், சிண்ணான்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சரிந்தன.
இதனால், சனிக்கிழமை மாலையில் இருந்தே இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்கம்பங்கள் சாய்ந்து 2 நாட்களாகியும், அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழையால் விழுந்த மரங்களை அகற்றவோ, மின்கம்பங்களை சீரமைக்கவோ எந்த அதிகாரியும் தங்கள் பகுதிக்கு வரவில்லை. மரங்களை தாங்களே வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் விரைந்து முடித்து தரப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தினால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக திருப்பூர் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.