மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறிகள் விற்பனை செய்து போராட்டம் நடத்திய விவசாயிகள்

கோவை : உழவர் சந்தையில் கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்கும் நூதன போராட்டம் நடத்தினர்.


கோவை : உழவர் சந்தையில் கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்கும் நூதன போராட்டம் நடத்தினர். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்பனை செய்யும் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில், கடை அமைத்து விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும், அங்கிருந்த பல விவசாயிகளை அதிகாரிகள் வெளியேற்றி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். 



மேலும், உழவர் சந்தையில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டுமெனவும், விவசாயிகளை வெளியேற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துவதாகவும், இல்லையெனில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிரந்தரமாக காய்கறிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...