கோவை : உழவர் சந்தையில் கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்கும் நூதன போராட்டம் நடத்தினர்.
கோவை : உழவர் சந்தையில் கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்பனை செய்யும் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில், கடை அமைத்து விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும், அங்கிருந்த பல விவசாயிகளை அதிகாரிகள் வெளியேற்றி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும், உழவர் சந்தையில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டுமெனவும், விவசாயிகளை வெளியேற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துவதாகவும், இல்லையெனில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிரந்தரமாக காய்கறிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.