பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த சூழலில், கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலே, எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த கூற்றை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வந்தன.
இந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல், 77 ரூபாய் 43 காசுகளாக இருந்த நிலையில், 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.77.61-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் 69 ரூபாய் 56 காசுகளாக இருந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில், கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலே, எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த கூற்றை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வந்தன.
இந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல், 77 ரூபாய் 43 காசுகளாக இருந்த நிலையில், 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.77.61-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் 69 ரூபாய் 56 காசுகளாக இருந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.