எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் : சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  



சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன 8-வது மாநில மாநாடு கோவையில் மே 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மூன்று. மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, சி.ஐ.டி.யு., மாவட்ட (பொ) செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மாநாடு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும், அண்டை நாடுகளில் விற்பனை செய்வது போல குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும். சமீபத்தில் உயர்த்தியுள்ள எரிபொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சென்னை பெருநகரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ் கருவியுடன் பிரிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது. உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...