எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் : சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  



சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன 8-வது மாநில மாநாடு கோவையில் மே 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மூன்று. மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, சி.ஐ.டி.யு., மாவட்ட (பொ) செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மாநாடு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும், அண்டை நாடுகளில் விற்பனை செய்வது போல குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும். சமீபத்தில் உயர்த்தியுள்ள எரிபொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சென்னை பெருநகரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ் கருவியுடன் பிரிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது. உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...