வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.
வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.
வாளையார்-வடக்கஞ்ச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை தடுக்க கேரள மாநில போலீசார் ஸ்பீடு காமிராக்களை பொருத்தியுள்ளனர். அதன்படி, 54 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 37 காமிராக்கள் பொருத்தபட்டுள்ளன.
பொதுவாக இது போன்ற ஸ்பீடு காமிராக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்வார்கள். ஆனால், இடைவெளி விட்டு பொருத்தப்பட்ட இந்த ஸ்பீடு காமிராக்கள் மூலம், ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எத்தனை வேகத்தில் சென்றார் என்பதைக் கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேகத்தில் செல்பவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க முடியும்.
இந்த சாலையில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாளையார்-வடக்கஞ்ச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை தடுக்க கேரள மாநில போலீசார் ஸ்பீடு காமிராக்களை பொருத்தியுள்ளனர். அதன்படி, 54 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 37 காமிராக்கள் பொருத்தபட்டுள்ளன.
பொதுவாக இது போன்ற ஸ்பீடு காமிராக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்வார்கள். ஆனால், இடைவெளி விட்டு பொருத்தப்பட்ட இந்த ஸ்பீடு காமிராக்கள் மூலம், ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எத்தனை வேகத்தில் சென்றார் என்பதைக் கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேகத்தில் செல்பவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க முடியும்.
இந்த சாலையில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.