மாணவியை தகாத வார்த்தையில் திட்டியதாக பாரதியார் பல்கலை., துணை தலைவர் மீது புகார்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துணை தலைவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துணை தலைவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை உளவியல் துணையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிதா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பிரேமா மறுத்ததோடு, விடுதியைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துணை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், மேஜை மீது நிற்க வைத்து தண்டித்தாகவும் தெரிகிறது. மேலும், துணை தலைவர் வேலாயுதம் ஹரிதாவை தகாத வார்த்தைகளில் பேசிய திட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, வேலாயுதம், பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துணை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைக்கழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்பு காவல் துணையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...