மாணவியை தகாத வார்த்தையில் திட்டியதாக பாரதியார் பல்கலை., துணை தலைவர் மீது புகார்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துணை தலைவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துணை தலைவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை உளவியல் துணையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிதா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பிரேமா மறுத்ததோடு, விடுதியைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துணை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், மேஜை மீது நிற்க வைத்து தண்டித்தாகவும் தெரிகிறது. மேலும், துணை தலைவர் வேலாயுதம் ஹரிதாவை தகாத வார்த்தைகளில் பேசிய திட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, வேலாயுதம், பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துணை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில், முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மாணவி ஹரிதா புகார் அளித்துள்ள விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ், பல்கலைக்கழக துணை வேந்தருக்கு லஞ்சம் பெற்று தந்த புகாரில், லஞ்ச ஒழிப்பு காவல் துணையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...