மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கி தேயிலை தொழிலாளி பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.

குந்தா தாலுகா மஞ்சூர் அருகே கோடரி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலடா வேலி எனும் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் ராமலிங்கம் (60) என்பவர் இன்று காலை 8 மணியளவில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.



அப்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை ராமலிங்கத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராமலிங்கத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...