நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடரி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி பலியானார்.
குந்தா தாலுகா மஞ்சூர் அருகே கோடரி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலடா வேலி எனும் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் ராமலிங்கம் (60) என்பவர் இன்று காலை 8 மணியளவில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை ராமலிங்கத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராமலிங்கத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குந்தா தாலுகா மஞ்சூர் அருகே கோடரி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலடா வேலி எனும் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் ராமலிங்கம் (60) என்பவர் இன்று காலை 8 மணியளவில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை ராமலிங்கத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராமலிங்கத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.