நீலகிரி: உதகையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 200 ரகங்களில் மலர்கள் இடம்பெற உள்ளன.
நீலகிரி: உதகையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 200 ரகங்களில் மலர்கள் இடம்பெற உள்ளன.

சுற்றுலா நகரமான உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மலர் மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

இந்த மலர் கண்காட்சியில் 200 ரகங்களில், மொத்தம் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, இன்கோ மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பெகோனியா செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம், ஜினியா உள்ளிட்ட மலர் ராகங்கள் வைக்கப்பட உள்ளன.

மேலும், இவ்வாண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக பூங்காவில் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 ரக கார்னேஷன் மலர்கள் வைக்கப்படவுள்ளது.


சுற்றுலா நகரமான உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மலர் மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

இந்த மலர் கண்காட்சியில் 200 ரகங்களில், மொத்தம் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, இன்கோ மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பெகோனியா செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம், ஜினியா உள்ளிட்ட மலர் ராகங்கள் வைக்கப்பட உள்ளன.

மேலும், இவ்வாண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக பூங்காவில் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 ரக கார்னேஷன் மலர்கள் வைக்கப்படவுள்ளது.
