கோவை: மாநகர பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை: மாநகர பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பம் வாட்டிவதைத்து வந்த சூழ்நிலையில், கடந்து சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. கோவையில் வழக்கமாக பெய்யும் மழையைப் போல் அல்லாமல், பலத்த காற்றுடன் பெய்து வரும் இந்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

நேற்று பெய்த மழையில் காந்திபுரம் அருகே இருந்த மின் மாற்றி ஒன்றில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் கனமழை நேரத்தில் மின் தடை செய்யப்படுகிறது.

மழை அளவு
கோவையில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:-
| 09/05/18 | 399 mm |
| 10/05/18 | 128 mm |
| 11/05/18 | 70 mm |
| 12/05/18 | 73.4 mm |
நேற்று (12-ம் தேதி) மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-
அன்னூர் 9 மி.மீ, பீளமேடு 21.4 மி.மீ, பொள்ளாச்சி 6 மி.மீ, சூலூர் 5.20 மி.மீ, வேளாண் பலகலை., .80 மி.மீ, சின்கோனா 4 மி.மீ, சின்னக்கல்லார் 8 மிமீ., பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 12 மி.மீ, வால்பாறை 7 மி.மீ. மாவட்டத்தின் சராசரி அளவாக 6.67 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 116.20 மி.மீ மழை பெய்துள்ளது.
இந்த நான்கு நாட்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 670.4 மி.மீ மழை பெய்துள்ளது. பொதுவாக கோடை காலத்தில் பெய்யும் மழை அளவை விட தற்போது அதிக மழை பெய்துள்ளதாக வேளாண் பல்கலை., அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



