கடந்த நான்கு நாட்களில் கோவையில் பெய்த மழை அளவு என்ன தெரியுமா?

கோவை: மாநகர பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: மாநகர பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பம் வாட்டிவதைத்து வந்த சூழ்நிலையில், கடந்து சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. கோவையில் வழக்கமாக பெய்யும் மழையைப் போல் அல்லாமல், பலத்த காற்றுடன் பெய்து வரும் இந்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.



நேற்று பெய்த மழையில் காந்திபுரம் அருகே இருந்த மின் மாற்றி ஒன்றில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் கனமழை நேரத்தில் மின் தடை செய்யப்படுகிறது.



மழை அளவு

கோவையில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:-

09/05/18399 mm
10/05/18128 mm
11/05/1870 mm
12/05/1873.4 mm


நேற்று (12-ம் தேதி) மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-

அன்னூர் 9 மி.மீ, பீளமேடு 21.4 மி.மீ, பொள்ளாச்சி 6 மி.மீ, சூலூர் 5.20 மி.மீ, வேளாண் பலகலை., .80 மி.மீ, சின்கோனா 4 மி.மீ, சின்னக்கல்லார் 8 மிமீ., பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 12 மி.மீ, வால்பாறை 7 மி.மீ. மாவட்டத்தின் சராசரி அளவாக 6.67 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 116.20 மி.மீ மழை பெய்துள்ளது.

இந்த நான்கு நாட்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 670.4 மி.மீ மழை பெய்துள்ளது. பொதுவாக கோடை காலத்தில் பெய்யும் மழை அளவை விட தற்போது அதிக மழை பெய்துள்ளதாக வேளாண் பல்கலை., அறிவித்தது குறிப்பிடத்தக்கது.









Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...