திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாராபுரம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை அப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் இருந்த கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில், அம்மாபாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். அப்போது, தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களை புனரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். தற்போது, மீண்டும் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாராபுரம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை அப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் இருந்த கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில், அம்மாபாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். அப்போது, தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களை புனரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். தற்போது, மீண்டும் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
