பல்லடம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - ஐவர் காயம்

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாராபுரம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை அப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் இருந்த கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், அம்மாபாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.



இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். அப்போது, தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களை புனரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். தற்போது, மீண்டும் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.



Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...