கோடை சுற்றுலா: குன்னூர் சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள்

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கே செல்லலாம்? என்ன பார்க்கலாம்? என்று சிம்ப்ளிசிட்டி வாராந்திர கட்டுரை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் குன்னூர் பகுதியிலுள்ள சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள் பற்றி காணலாம்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எங்கே செல்லலாம்? என்ன பார்க்கலாம்? என்று சிம்ப்ளிசிட்டி வாராந்திர கட்டுரை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் குன்னூர் பகுதியிலுள்ள சிம்ஸ் பூங்காவின் சிறப்புகள் பற்றி காணலாம்.

சிம்ஸ் பூங்கா

உதகைக்கு அடுத்தபடியாக குன்னூரில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக சிம்ஸ் பூங்கா விளங்கி வருகிறது. குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. கடந்த 1874-ம் ஆண்டு அப்போதைய சி.எஸ்.ஐ. செயலாளர் ஜே.டி.சிம் மற்றும் அப்போதைய வனத்துறை சூப்பிரண்டு மேஜர் முர்ரே ஆகியோர் சிம்ஸ் பூங்கா-வை தொடங்கி வைத்தனர்.



அமைப்பு

சிம்ஸ் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 12.14 ஹெட்டேர் ஆகும். 10.94 ஹெக்டேர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா கடல் மட்டத்திலிருந்து 1,768 மீட்டர் முதல் 1,798 மீட்டர் வரை உயரத்தில் உள்ளது. பூங்காவில் ருத்திராட்ச, காகிதம், கற்பூரம், யானைக் கால் மற்றும் அரக்கோரியா உள்ளிட்ட 10 வகையான மரங்கள் காணப்படுகின்றது. இதில் நூற்றாண்டைக் கடந்த மரங்களும் அடங்கும்.



இந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா வரும் குழந்தைகளை கவரும் வகையில் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுக்கள் உள்ளன. மேலும், படகு சவாரி செய்ய இங்குள்ள ஏரியில் படகு சவாரியும் விடப்படுகிறது.



கட்டண விபரம்

பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணமாக பெரியவர்க்கு ரூ.30, சிறியவர்க்கு ரூ.15, காமிராவுக்கு ரூ.50 மற்றும் வீடியோ காமிராவுக்கு ரூ.100-ம் வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி செய்ய நபர் ஒருவருக்கு ரூ. 25 வசூலிக்கப்படுகிறது. 

சிம்ஸ் பூங்காவிற்கு செல்ல குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்துகளும், அரசு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.



மேலும், குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் இந்த பூங்கா அமைந்துள்ளதால் கோத்தகிரி செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். ஆண்டு தோறும் இங்கு பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் 60-வது பழக் கண்காட்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...