கோவை: இளையராஜா இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியின்றி சி.டி.க்களாக வெளியிட்டு வரும் தனியார் இசை தட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: இளையராஜா இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியின்றி சி.டி.க்களாக வெளியிட்டு வரும் தனியார் இசை தட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆடீஸ் வீதியில் "ஹனி பீ மியூசிக்" என்ற இசைதட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை சி.டி.யாகவும், இணையதளத்திலும் எந்தவித அனுமதியுமின்றி வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், வேறு, வேறு இசைகளை ,இளையராஜாவின் இசையுடன் புகுத்தி (DTS format) வெளியிட்டு வருவதாகவும், இதனால், இசை உலகில் இளையராஜாவிற்கு உள்ள நற்பெயர் கெட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இளையராஜாவின் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசாமி தமிழன், தனியார் இசைத்தட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள இசைத்தட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும். உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு முரணாக சி.டி. வெளியிட்டு சம்பாதித்த பணத்தை வைத்திருக்கும் அந்நிறுவன உரிமையாளர்கள் வங்கிக் கணக்கையும், அந்நிறுவன அந்நிறுவன வங்கிக் கணக்கையும் முடக்க வேண்டும். இளையராஜா பெயரைப் பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிமையாளர் அந்தோணி முத்துசாமியையும் கைது செய்ய வேண்டும், இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை ஆடீஸ் வீதியில் "ஹனி பீ மியூசிக்" என்ற இசைதட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை சி.டி.யாகவும், இணையதளத்திலும் எந்தவித அனுமதியுமின்றி வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், வேறு, வேறு இசைகளை ,இளையராஜாவின் இசையுடன் புகுத்தி (DTS format) வெளியிட்டு வருவதாகவும், இதனால், இசை உலகில் இளையராஜாவிற்கு உள்ள நற்பெயர் கெட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இளையராஜாவின் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசாமி தமிழன், தனியார் இசைத்தட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள இசைத்தட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும். உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு முரணாக சி.டி. வெளியிட்டு சம்பாதித்த பணத்தை வைத்திருக்கும் அந்நிறுவன உரிமையாளர்கள் வங்கிக் கணக்கையும், அந்நிறுவன அந்நிறுவன வங்கிக் கணக்கையும் முடக்க வேண்டும். இளையராஜா பெயரைப் பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிமையாளர் அந்தோணி முத்துசாமியையும் கைது செய்ய வேண்டும், இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
