சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பது கவலை அளிப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பது கவலை அளிப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குழந்தை கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் பல பொய்யான தகவல்களால், திருவண்ணாமலையில் ஒரு மூதாட்டியும், திருவள்ளூரில் மனநோயாளி ஒருவரும் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகும், தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், சந்தேகத்திற்கிடமான நபர்களை அறிந்தால், போலீசில் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், "வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு, பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.
சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும், கடமையும் ஆகும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் பல பொய்யான தகவல்களால், திருவண்ணாமலையில் ஒரு மூதாட்டியும், திருவள்ளூரில் மனநோயாளி ஒருவரும் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகும், தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், சந்தேகத்திற்கிடமான நபர்களை அறிந்தால், போலீசில் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், "வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு, பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.
சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும், கடமையும் ஆகும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.