கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையத்திற்கு, தேசிய அளவிலான சிறந்த விதை தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கான விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையத்திற்கு, தேசிய அளவிலான சிறந்த விதை தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கான விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் தேசிய விதைத் திட்டத்தின் 33-வது வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விதைத் திட்டத்தின் 13-வது வருடாந்திர ஆய்வு கூட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மாநில வேளாண்மைப் பல்கலைக்கழக விதை அறிவியல் துறை விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆராய்ச்சி கூட்டத்தில், இந்திய அளவில் விதை தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மேற்கொண்ட 24 மையங்களில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 'விதை மையம்' சிறந்த ஆராய்ச்சி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதைப் புதுச்சேரி மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், விதை மையத்தின் தனி அலுவலர் (விதைகள்) பொ. செல்வராஜூவிடம் வழங்கிக் கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் உதவி பொது இயக்குனர் (விதைகள்) எஸ்.கே. யாதவ், திட்ட இயக்குநர் (தேசிய விதை திட்டம்) பி.கே. அகர்வால், காரைக்கால் பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வி. கந்தசாமி மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மைய விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் தேசிய விதைத் திட்டத்தின் 33-வது வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் விதைத் திட்டத்தின் 13-வது வருடாந்திர ஆய்வு கூட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மாநில வேளாண்மைப் பல்கலைக்கழக விதை அறிவியல் துறை விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆராய்ச்சி கூட்டத்தில், இந்திய அளவில் விதை தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மேற்கொண்ட 24 மையங்களில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 'விதை மையம்' சிறந்த ஆராய்ச்சி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதைப் புதுச்சேரி மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், விதை மையத்தின் தனி அலுவலர் (விதைகள்) பொ. செல்வராஜூவிடம் வழங்கிக் கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் உதவி பொது இயக்குனர் (விதைகள்) எஸ்.கே. யாதவ், திட்ட இயக்குநர் (தேசிய விதை திட்டம்) பி.கே. அகர்வால், காரைக்கால் பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வி. கந்தசாமி மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மைய விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.