'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது : அரவிந்த்சாமி வருத்தம்

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கு நடிகர் அரவிந்த்சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கு நடிகர் அரவிந்த்சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

'இரும்புத்திரை', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'நடிகையர் திலகம்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய நான்கு படங்கள் இன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மம்மூட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தமிழ் ரீமேக்கில் மம்மூட்டி வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். படத்துக்கு 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. நாயகியாக அமலா பாலும், குழந்தையாக நைனிகாவும் நடித்துள்ளனர். ரோபோ சங்கர், சூரி உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர்.

'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியாவதற்குத் தயாராக இருந்த நிலையில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பிரச்சினைகள் சுமுகமாக முடிக்கப்பட்டு அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாவது தள்ளிப்போவது குறித்து அரவிந்த்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், '''பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. மிகவும் அதிகமான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற பிறகும் படம் வெளியாவது தள்ளிப்போனது வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. படம் தள்ளிப்போனது தொடர்பாக எந்தக் காரணமும் தெரியவில்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...