கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தெற்கு தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 30 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த ஒத்திகையின் போது, தீ விபத்து மற்றும் நிலநடுக்க காலங்களில் எவ்வாறு மீட்புப் பணிகள் நடைபெறுகிறது? என்பதை செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு பேரிடர் தொடர்பான துண்டு பிரசுகரங்களை வழங்கினார். தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை கயிறு, வலை உபகரணங்கள் கொண்டு மீட்பது, திடீர் தீ விபத்து ஏற்படும் போது தீயை கட்டுப்படுத்துவது குறித்து அரசு ஊழியர்களே செய்து காட்டினர்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.