கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
130 மி.மீ மழை எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை 268 மி.மீ மழை பெய்துள்ளது. மீண்டும் மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வால்பாறை, நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ள மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
காலை நேரங்களில் 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகக்கூடும்.
கோவையில் சில இடங்களில் வெயில் அதிகமாகக் காணப்படும், பின்னர், அதே இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் மாறி மாறி காணப்படும்." என்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
130 மி.மீ மழை எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை 268 மி.மீ மழை பெய்துள்ளது. மீண்டும் மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வால்பாறை, நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ள மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
காலை நேரங்களில் 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகக்கூடும்.
கோவையில் சில இடங்களில் வெயில் அதிகமாகக் காணப்படும், பின்னர், அதே இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் மாறி மாறி காணப்படும்." என்றார்.