கோவையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக கோடை மழை பெய்துள்ளது - வேளாண் பல்கலை.,

கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

130 மி.மீ மழை எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை 268 மி.மீ மழை பெய்துள்ளது. மீண்டும் மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வால்பாறை, நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ள மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

காலை நேரங்களில் 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகக்கூடும்.

கோவையில் சில இடங்களில் வெயில் அதிகமாகக் காணப்படும், பின்னர், அதே இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் மாறி மாறி காணப்படும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...