பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் வேண்டும்: டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநில செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பூரண மது விலக்கு கொள்கை காரணமாக 7,000 டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்தி கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மதுபான விற்பனை பணத்தை செலுத்தச் செல்லும் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் செல்வதைத் தடுக்க ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் அளிக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சுப்புராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாளருமான ஆறுமுகம், டாஸ்மாக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...