கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: மதுபானம் விற்பனை செய்த பணத்தை கொள்ளை அடித்துச் செல்வது வாடிக்கையாகி விட்டதால் டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரை பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநில செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பூரண மது விலக்கு கொள்கை காரணமாக 7,000 டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்தி கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மதுபான விற்பனை பணத்தை செலுத்தச் செல்லும் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் செல்வதைத் தடுக்க ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் அளிக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சுப்புராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாளருமான ஆறுமுகம், டாஸ்மாக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநில செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பூரண மது விலக்கு கொள்கை காரணமாக 7,000 டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்தி கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மதுபான விற்பனை பணத்தை செலுத்தச் செல்லும் டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் செல்வதைத் தடுக்க ஊழியர்கள் பணம் செலுத்தச் செல்லும் போது பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர் அளிக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை இ.எஸ்.ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சுப்புராயன், பொதுச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயலாளருமான ஆறுமுகம், டாஸ்மாக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
