செல்வசிந்தாமணி குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றம்: வீடுகளுக்குள் புகுந்தது தண்ணீர்..!

கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.


கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

கோடை வெயில் அதிகரித்து அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தனன் குளம், செல்வசிந்தாமணி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் ஆகிய 5 குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.



இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரம் பகுதியிலுள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி குளத்தின் ஷட்டர்களை திறந்து விட்டனர். மேலும், செல்வபுரம் பகுதியிலிருந்து உக்கடம் பெரிய குளத்திற்கு செல்லும் கால்வாயில் உள்ள அடைப்பினை அதிகாரிகள் சரி செய்தனர்.



இதனால், கால்வாயை ஒட்டி அமைந்துள்ள அசோக் நகர் மற்றும் சேத்துமா வாய்க்கால் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பிவரும் நிலையில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தண்ணீரை திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்ததுள்ளது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையால் முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததே, இது போன்ற நிலை ஏற்படக் காரணம்." என்று குற்றம் சாட்டினர்.

Video: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...