விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் 'தேனீ வேலி': ஆர்வம் காட்டும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 'தேனி வேலி'க்களை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 'தேனி வேலி'க்களை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் மனித - யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல்வேறு காரணங்களினால் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை நாசப்படுத்துவதோடு, இதனைத் தடுக்க முயலும் மனிதர்களையும் தாக்கி கொன்றுவிடும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

இதேபோல, இம்மோதலில் யானைகளும் மின்சாரம் வைத்து மனிதர்களால் கொல்லப்பட்டு வருகின்றன. எனவே, இந்த மனித - யானை மோதலைக் கட்டுப்படுத்த யானை தடுப்பு அகழிகள், சோலார் மின் வேலிகள் என எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் போதிய பலனை தரவில்லை. இதனால், பயிர் மற்றும் உயிர் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளின் ஊடுருவலை தடுப்பதற்காக, நடைமுறையில் உள்ள தேனீ வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், வனத்துறையினரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அதன்படி, விவசாய தோட்டங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள சோலார் மின் வேலியின் அருகில் சீரான இடைவெளியில் மர பெட்டிகளாலான தேன் கூடுகளை அமைத்து, அதில் தேனீக்களை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பெட்டியிலும் ராணி தேனீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருப்பதாலும் இவை நாள் முழுவதும் தேன் சேகரிப்பு பணியில் சுறுசுறுப்புடன் இயங்கியபடி இருக்கும். இவற்றின் இடைவிடாத ரீங்கார ஒலியைகேட்டு யானைகள் இதன் அருகில் கூட வருவதில்லை.

ஐந்து டன் எடை கொண்ட பிரமாண்ட யானையின் துதிக்கையில் உள்ள மென்மையான பகுதியில் ஒரு கிராம் எடை மட்டுமே கொண்ட தேனீ கொட்டினால் அதனை யானைகளால் தாங்க இயலாது என்ற காரணத்தினாலேயே அவை விலகி ஓடுகின்றன என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். 

குறிப்பாக, யானைகளின் ஊடுருவல் அதிகமாக உள்ள மலையடிவார கிராம விவசாயிகள், இதேபோல, தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களைத் தடுப்பது மட்டுமின்றி தூய்மையான தேன் சேகரித்து கூடுதல் வருவாயும் கிடைக்கும். மேலும், தேனீக்களின் மகரந்த சேர்க்கையினால் மகசூலும் நாற்பது சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

தேனீக்கள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சியும் அளிக்கப்படுவதால் மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தற்போது தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முயற்சி பரவலாக்கப்பட்டு பலனளிக்க துவங்கும் போது மனித - யானை மோதல்கள் குறைந்து இழப்புகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...