​கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை இடியுடன் மழைக்கு வாய்ப்பு

​கோவை: ​கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.





கோவை: 


கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், பல இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இந்நிலையில், வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், நாமக்கல், கரூர், சத்தியமங்கலம், கோபி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவையை பொறுத்தவரையில், லேசான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே, தமிழகத்தில் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...