நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேறி பூங்கா உட்பட 5 பூங்காக்கள், 9 பண்ணைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் 463 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வாராந்திர விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தோட்டக்கலை இணை இயக்குநர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், அரசிடமிருந்து பதில் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகள், பாத்திகள் பராமரிப்பு பணிகள் 5-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடரும்பட்சத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஏற்பாடு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேறி பூங்கா உட்பட 5 பூங்காக்கள், 9 பண்ணைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் 463 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வாராந்திர விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி முதல் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தோட்டக்கலை இணை இயக்குநர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், அரசிடமிருந்து பதில் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகள், பாத்திகள் பராமரிப்பு பணிகள் 5-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் தொடரும்பட்சத்தில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஏற்பாடு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.