கர்நாடகா தேர்தலுக்கு பின்னர் காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவு

காவிரி வரைவு செயல் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, அதாவது வரும் 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி வரைவு செயல் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, அதாவது வரும் 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் இருப்பதால் அதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனிடையே, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பங்கீட்டை விட கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் திறக்க முடியாது. மேலும், போதிய மழை இல்லாததால், இங்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லை, என அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல, தமிழக அரசும் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “கர்நாடக அணைகளில் தற்போது 19 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதில், 4 டி.எம்.சி தண்ணீரை உடனே ஒதுக்க உத்தரவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வேறு தரப்பினரின் வாதங்கள் நடைபெற்றது. காவிரி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசின் சார்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வரும் 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை. வரும் 12-ம் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலை மனதில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக ஒருபுறம் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...