கோவை: வரும் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கோவை: வரும் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

நேற்று முதல், வரும் 10-ம் தேதி வரையிலான மழை விபரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. அதில் 7-ம் தேதி வரை வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், 8-ம் தேதி தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும், 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


